3 comments

விடுகதை - விடை சொல்லுங்க

ஒரு பொண்ணு ஒரு பையன் - அந்த பையனொட அப்பா யாருக்கோ மாமனார். அந்த மாமனாரோட அப்பா அந்த பொண்ணொட மாமனார். இப்போ அந்த பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன உறவு. விடை சரியா சொன்னால் அந்த பொண்ணு உங்களுக்கு தான். விடை தப்பா சொன்னால் அந்த பையன் நீங்க தான்.
read more
2 comments

தாம்பத்ய அகராதி



- அலுவலகம்: வேலை செய்யும் போது நரகமாகவும், வீட்டுக்கு வந்தவுடன் சொர்க்கமாகவும் தோன்றும் இடம்!

- ஆட்டுக் கல்: மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி, ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்!

- இரு சக்கர வண்டி: தாம்பத்யம் என்பது சைக் கிளைப் போல. நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இயங்காவிட்டால், முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை.

- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படி நிற்க வேண்டியது தான்.

- "உயிரொப்பந்தம்' எனப் படும் ஆயுள் இன்சூரன்ஸ்: உங்கள் ஆயுளை இன்ஷூர் செய்து, பாலிசியில், "நாமினி' பெயரைப் பூர்த்தி செய்யாமல் விட்டு வையுங்கள். மனைவி கொஞ்சம் இடக்கு பண்ணும் போது, "நாமினி' என்று சொல்லிப் பாருங்கள். மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி விடுவார்.

- ஊமை: தொணப்புகிறவர்களை ஓரளவுக்கு வழிக்கு கொண்டு வரலாம். ஊமை போல், "உம்' மென்று இருக் கிறதுகளிடம்தான் எச் சரிக்கை தேவை.

- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்.

- ஏய்: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லி, பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்...' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.

- ஐன்ஸ்ட்டீன்: "ரிலேடிவிட்டி தியரி'யைக் கண்டுபிடித்தவர். இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களைப் போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.

- ஒரு முழம்: இதற்கு அநேக அர்த்தங்கள் உண்டு; விளக்கம் தேவையில்லை.

- ஓமத் திராவகம்: எந்த மனிதனுக்கும் தன் வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லாமலிருக்குமா? நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாகச் சாப் பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றை பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது? அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாகவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திராவகம் கொடேன்...' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுவீர்கள்.

ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி.
read more
0 comments

அம்னோ பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு


அம்னோ உச்சமன்றம், அம்னோ பொதுக்கூட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து நஜிப் அப்துல் ரசாக்குக்கு அதிகாரத்தை மாற்றிவிடும் நிகழ்வு சுமுகமாக நடைபெறுவதற்கு வசதியாக இவ்விதம் செய்யப்படுகிறது.

அம்னோ பொதுக்கூட்டமும் கட்சித் தேர்தல்களும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தன.

எனினும் தொகுதித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 9 தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதிவரை நடைபெறும்.

இன்று காலை நடைபெற்ற அவசர உச்சமன்றக் கூட்டத்தில் இம்முடிவுகள் செய்யப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா, கட்சித் தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்வாரா என்பது பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். அக்டோபரில் தொகுதி நிலையில் தேர்தல்கள் நடைபெறுவதற்குமுன் அது பற்றி முடிவு செய்யப்பட்டும் என்று அவர் சொன்னார்.

“எனக்கு நெருக்குதல் எதுவும் இல்லை. அது (அதிகார மாற்றம்) நான் எடுக்கும் முடிவாக இருக்கும்”, என்றாரவர்.

“அதிகார மாற்றத்துக்கு வசதியாக பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது”, என்றும் அப்துல்லா கூறினார்.

அப்துல்லா,முதலில் 2010 ஜூன் மாதம்தாம் அதிகாரத்தை நஜிப்பிடம் ஒப்படைகக் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அண்மைய வாரங்களில், அதிகார மாற்றம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வாக்கில் நிகழ வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வந்துள்ளது.

read more
0 comments

அடுத்த முதல்வர்


நெல்லை வந்த கார்த்திக், நாங்குநேரி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேவர் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக அகிம்சை வழியில் நாம் போராட வேண்டும். இங்கு சிலையை அவமதித்ததாக தகவல் அறிந்தவுடன் இங்கு வர நினைத்தேன். சில வேலைகள் காரணமாக உடனே வர முடியவில்லை.


உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து விடுவேன். தோள் கொடுப்பேன். உங்களோடுதான் நான் இருப்பேன். சிலர் தற்போது கட்சி ஆரம்பித்து விட்டு முதல்வராகி விடுவேன் என்று கூறி வருகின்றனர். அப்படி நினைக்க கூடாது. முதல்வர் பதவி என்பது பெரிய ஸ்தானத்தில் உள்ளது. அதில் பல தலைவர்கள் தலைவிகள் அமர்ந்துள்ளனர்.

நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். நாம் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களில்தான் ஈடுபடவேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும் என்றார்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
read more
1 comments

தமிழனின் தலையாகிய பிரச்சனை. - கொஞ்சம் பெருசு தான்



இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அதை நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார். கூடவே அவர் அனுப்பியுள்ள கடிதம்தான் இது.

புஷ் கூறியுள்ளதன் சாராம்சம் என்னவென்றால், எரிபொருளை தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அது நினைத்தால் எரிபொருள் சப்ளையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள முடியும். அதை இந்தியா ஏன் என்று கேட்க முடியாது. சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையிலும் இந்தியாவால் ஈடுபட முடியாது என்பதே.

ஆனால் இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சொல்லும் ஒரு முக்கியமான வாதம்
123 ஒப்பந்தத்தில் எந்தக் காரணத்திற்காகவும் எரிபொருள் சப்ளை பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, என்.எஸ்.ஜி. அமைப்பு தன் பங்குக்கு இன்னொரு குண்டைப் போட்டுள்ளது. இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள என்.எஸ்.ஜி., இந்தியாவுக்கு நவீன அணு தொழில்நுட்பங்கள் எதையும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி யுரேனியம் செறிவூட்டுவது உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று என்.எஸ்.ஜி தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளிடம் இதைக் கூறித்தான், என்.எஸ்.ஜி. சமாளித்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் புஷ் கடிதமும், என்.எஸ்.ஜியின் முடிவும் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. (நன்றி - தட்ஸ் தமிழ்)

இதெல்லாம் போதாதுன்னு நாம க்ரிடிச விமர்சகர் ஞானி வேற இந்த வாரம் ஒ மம்மி ரேடுர்ன்ஸ் கிழினு கிழிசிருகாறு.

அவர் சொன்ன சில விஷயங்கள் அழமாக கவனிக்கப்பட வேண்டியவை.

அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது. கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.


இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !



இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது. (நன்றி - குமுதம் மற்றும் குற்றாலச்சாரல் ).

ஆனாலும் இதுக்கெல்லாம் தமிழன் பயன்துடுவான, விஜயகாந்தயே நாம பெரும்தன்மையோட ஏத்துகிட்டோம். இந்த அணு விசயமெல்லாம் ஜுஜுபீ. எல்லாரும் சொல்லற மாதிரி தமிழன் வந்தாரை வாழ வைப்பவன். அதனால இதுவும் தான் வந்துட்டு போகட்டும்.

ஆனா ஒரு சராசரி தமிழன்னோட பிரச்சனையே வேற.

இன்னைக்கு எந்த கட்சி மாநாடு நடத்துது. அதுல என்ன சரக்கு கேட்கும். புல்லா இல்ல ஆப் தான் கெடைக்குமா.

இன்னைகி மான்ஆட மயிலாட நிகழ்ச்சியில என்ன பிரச்சனை வரும். ஆடுற பிள்ளைங்க எல்லாம் நல்ல ஆடுமா?

தினமலர் - சன் டிவி பிரச்சனை என்ன ஆச்சு?.

கோலங்கள்அபிக்கு இன்னும் என்ன என்ன பிரச்சனை எல்லாம் வருமோ ?.

சரத்குமார் பொண்ணு சிம்பு கூட நடிக்குமா ?. சிம்பு மீண்டும் நயன் கூட சேருவாரா ?.

தலையோட அடுத்த படம் ஏகன் ஹிட் ஆகுமா?.

இப்படியே இன்னும் எவ்வளவோ தலையாகிய பிரச்சனை எல்லாம் இருக்கு.

இப்படிக்கு
வாய்கிழிய பேச மட்டுமே தெரிஞ்ச ஒரு தமிழன்.













read more
4 comments

வெற்றி திருமுகம் - பட விமர்சனம்.


நேத்து இந்த தெலுங்கு டப்பிங் படம் வெற்றி திருமுகம் பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. அப்படியே ஒடம்பு எல்லாம் புல்லரிசி போச்சி. ஏன் இன்னும் அந்த பட டைரக்டர்ருக்கு கோவில் கட்ட யாரும் வரலை.

படம் கதை இது தன். சின்ன வயசுல அப்பன்நால ஏமாத்தபட்ட நம்ம ஹீரோ பெரியவநாயி அப்பன பழிக்கு பழி வாங்குறாறு.

இந்த ஒரு லைன் கதையை ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பின்னி பிடல் எடுத்த படம் தான் இது. படத்துல நாம சுகன்யா வேற இருக்குங்க. என்ன வேஷம் ந்ம்ம வில்லன் பிரகாஷ்ராஜ் ஓட பொண்டாட்டி வேஷம்.


படத்தோட மெயின் மேட்டர் டப்பிங் டயல்லோக் தான். ஹீரோஇன் நம்ம திர்ஷாவ ஓவர்டக் பண்ண இலியான.

மசாலா விரும்பிகளுக்கு இந்த படம் நிச்சியம் ஒரு திருவிழா தான். மத்தபடி நீங்க பொது ஜன படம் பார்க்க விரும்பின இது லாயக்கு இல்ல.
read more
0 comments

இப்போவே கண்ண கட்டுதே ........

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒரு முறை சொல்லிஇருக்கிறார்அவருடைய கட்சியில் குற்ற பின்னணி உள்ள யாரையும் சேர்க்க போவது இல்லைன்னு.

இப்படி நம்ம தமிழ் நாட்டுலயும் எல்லா கட்சி களும் சொன்னா எப்படி இருக்கும். அதுலயும் இந்த கார்பொரட் தி.மு.க மற்றும் காபிடல்லிஸ்ட் ஆ.தி.மு.க இந்த உறுதி மொழி எடுத்தா தமிழ் நாடு சிக்கிரம் உருப்படும். ஆனா இந்த மு.க மற்றும் ஜெ.ஜெ இருக்குறவரைக்கும் இதற்காண வாய்ப்பே இல்லை.

சரி இந்த விஜயகாந்த் எதாவது புதுசா இருப்பார்னு பார்த்த ஹும்... எதுவும் சொல்லற மாதிரி இல்ல இப்ப. முதல்ல தி.மு.க குடும்ப கட்சிணு சொன்னாரு. இப்ப பார்த்த அவரு மச்சானும் பொண்டாடியும் தான் இப்ப அங்க ஆட்சியே பண்றாங்க.

இதல்லாம் போததுன்னு இன்னகி இந்த அர்ஜுன் கிட்ட போயி அரசியல பத்தி கருத்து கேடு இந்த தின தந்தி பத்திரிகையேல பேட்டி போட்டு இருக்காங்க. அய்யா பத்திரிக்கை புனியவான்களா என் ராசா இதுவரிக்கும் போட்டதெல்லாம் பத்தாதுன்னு இப்போ இந்த அர்ஜுன்னையும் இழுத்து விடணுமா. அப்படி என்னைய அவரு நாட்டுக்கு செஞ்சாரு. துப்பாக்கி எடுத்து நாட்ட காப்பதுறேன்னு
ஒருத்தர கெளப்பி விட்டின்க இப்போ இன்னொருத்தரையும் விடமாட்டிங்க போல.

இதல்லாம் பார்த்த என்னகு இப்போவே கண்ணா கட்டுது........
read more
0 comments

மெகா சீரியல் படுத்தும் பாடு .............

நண்பர்களே,,,

இந்த பாட்ட கேளுங்க .... கேளுங்க ...... கேட்டுகிடே இருங்க ....



read more
1 comments

பாமரன் - புலம்பல்கள் .......

புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத

எண்ணியிருந்த கட்டுரை வேறு.

அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.

ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்

எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.

தீவிரவாதிகள் - அகிம்சாவாதிகள் - தியாகிகள் - துரோகிகள் -

என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.

கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.

இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..

மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்

இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?

உண்மைதான்…

தீவிரவாதிகள் யார்?

அடிப்படைவாதிகள் யார்?

போராளிகள் யார்?

பயங்கரவாதிகள் யார்?

இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?

அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?

ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.

நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…

அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.

ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.

பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து

அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.

பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.

ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து

தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்

பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.

சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்

இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு

மட்டும்தான் என்றில்லை,

தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை

ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…

சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய

பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.

எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்

ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த

ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.

அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு

ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.

சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…

திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.

பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.

‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து

இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்

காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.

பிற்பாடு ‘தேசத்துரோகி’.

நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே

மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே

என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சர்வதேச அளவிலாகட்டும் - இந்திய அளவிளாகட்டும் -

அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.

அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்

மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.

இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…

(உலகளாவிய ‘பார்வையில்’

இந்து - கிருஸ்துவ - யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது

என்பது சுவாரசியமான விஷயம்.)

பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு

விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.

நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.

மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.

மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

தங்கத் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையும் ஒரு அகராதி உண்டு.

அதுதான் தமிழில் கல்வியும் - வழிபாடும் - குடமுழுக்கும் - ஒதுக்கப்பட்டோருக்கு உரிமையும்

வேண்டும் என்பவர்கள் ‘தமிழ்த் தீவிரவாதிகள்’.

“தாழ்த்தப்பட்ட மக்கள் பியூட்டி பார்லருக்குப் போய்

‘பேசியல்’ செய்து கொண்டு…

‘ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ்’ ஷாம்ப்போடு

‘லக்ஸ்’ போட்டுக் குளித்து…

யார்ட்லி செண்ட்டோடுதான் கோயிலுக்குள் வரவேண்டும்” என்கிற

மடச் சாமியார் ‘மிதவாதி’.

(தேசம் தழுவிய பார்வையில்

மலையாள - கன்னட - குஜராத்தி தீவிரவாதிகள்

என்று யாருமே கிடையாது என்பதும் சுவாரசியமான விஷயம்தான்.)

எது எவ்விதமோ…

ஆனால் காலச்சக்கரம் மட்டும் சுழலாமல் நிற்பதில்லை.

வரலாறுகள் மாறும்போது…

இன்றைய “துரோகிகள்”….

நாளைய தியாகிகள்.

ஆனால்….

இன்றைய “தியாகிகள்….?

இப்போ இதை படிச்சாலும் அப்படியே புல்லரிகுது சாமியோவ் .......


read more
0 comments

இப்போ ரஜினினா கோலிவுட்ல மட்டும் இல்ல பாலிவுட்லையும் பிரச்சனை தான் .




இப்ப தன் ஒரு செய்தி படிச்சேன். இயக்குனர் ஷங்கருக்கும் பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாரூக் கானுக்கும் இடையிலான மோதல் பெரிதாக வெடித்துள்ளது. தான் நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்டு இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஷங்கரின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பான ரோபோவுக்கு நூதனமாக நெருக்கடி கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் நடிகர் ஷாரூக். ரோபோ எனும் பெயரில் கிட்டத்தட்ட 9 புதுப்படத் தலைப்புகளைப் பதிவு செய்து வைத்துள்ளாராம் ஷாரூக் (நன்றி - தட்ஸ் தமிழ்.காம்).

நான் ஒரு தடவ சொன்னாலும் நூறு தடவ சொன்ன மாதிரின்னு தலிவர் சொன்னாலும் சொன்னார்... இன்த ஒகேனகல் பிரச்சனைக்கு அப்பறம் எங்க போனாலும் தலைய இப்ப சுத்தி சுத்தி ரௌண்டு கட்டி அடிகிறாங்க.

தலைவா இப்போ நாங்க கேக்குறது எல்லாம் இத எல்லாம் ஒரு பெரிய விஷயமா நீங்க நினைக்காம நான் எங்க வருவேன் எப்படி வருவேன்னு முத்துஒரு டயலாக் விடுவின்களே அந்த மாதிரி அதிரடியா ஒரு ஹிட் கொடுங்க.....

அப்பதான் இப்ப டைநோசௌர் மாதிரி வாய அகலமா தொறந்து பேடி கொடுக்கிற ஆளுங்க எல்லாம் இன்னும் கொஞ்சம் பொளந்துகிட்டே டரியல் ஆவங்க
வடிவேலு சொல்ற மாதிரி ........








read more
0 comments

கலக்குங்க பாரதி பாஸ்கர்........

நேத்து சாலமன் பாப்பையா பட்டி மண்டபம் கேட்டேன். விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி. இப்போ எல்லாம் சாலமன் பாபபைய்யாவின் பேச்சு ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. என்ன ஆச்சு பாப்பய்யா சார்.

உங்கள் மதுரை வட்டார தமிழ்யை விரும்பும் கோடானு கோடி தமிழர்களில் நானும் ஒருவன். அய்யா இனிமேலாவது நல்ல தலைப்புகளை தேர்ந்து எடுத்து பேசுங்க .....

அய்யா என்ன்னைய்யா ஆச்சு????????......... வாங்கைய்யா மீண்டும் பழைய போர்முக்கு.....

ஆனா இதுல ஒன்னு கவனிக்க வேண்டியது வர வர இந்த பாரதி பாஸ்கர் ரொம்ப நல்ல பேசுறாங்க. கலக்குங்க பாரதி பாஸ்கர்....
read more
2 comments

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.


அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

இந்த நன்நாளில் அந்த யானை முகத்தாநின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.

read more
1 comments

நல்லா வாழ நாலு வளி


Tips for Better Life from ISHA YOGA (www.ishafoundation.org)




1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26.. What other people think of you is none of your business.
27. However good or bad a situation is, it will change.
28. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
29. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
30. Envy is a waste of time. You already have all you need.
31. The best is yet to come.
32. No matter how you feel, get up, dress up and show up.
33. Do the right thing!
34. Call your family often.
35. Your inner most is always happy. So be happy.
36. Each day give something good to others.
37. Don't over do. Keep your limits.

read more

எல்லாருக்கும் வணக்கம். இது என்னோட முதல் போஸ்ட். இதை நான் சும்மா டைம் பாஸ் ப்லோக்ல இருந்து சுட்டேன். சாரி தம்பிங்களா ....

வினய் ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார், வசீகரமாக சிரிக்கிறார், அந்த காலத்து குரு கமல் மாதிரி தொங்கு மீசை, எந்த உடை போட்டாலும் இவருக்கு பொருந்துகிறது, படத்தில் அறிமுகமாகும் காட்சியில் காலேஜ் படிக்கும் பெண்கள் கைத்தட்டுகிறார்கள், மொத்தமாக அவ்வளவுதான்! நடிப்பு முழம் எவ்வளவு என்று கேட்கும் லெவலுக்கு தான் அவரது நடிப்பு!

அப்பா இறந்தபிறகு லண்டனில் இருந்து ஊருக்கு திரும்பும் அர்ஜூன் (வினய்) பிசினஸ் தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார். இங்கு வந்தபிறகு தான் தெரிகிறது அக்னிநட்சத்திரம் விஜயகுமார் ஸ்டைலில் அப்பாவுக்கு இன்னொரு சேனலும் இருந்திருக்கிறது, அந்த சேனலுக்கு தடாலடியான இன்னொரு பெண்வாரிசும் இருந்திருக்கிறது. மதுரையும், சென்னையுமாக மாறி இருவரும் போட்டுக்கொள்வது சொத்துக்கு வாரிசுச்சண்டை. வினய்க்கு பிசினஸ் தொடங்கவேண்டும் என்பது லட்சியமாக இருப்பது போல, அவரது தங்கைக்கு அமெரிக்காவுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கிறது. இடையில் எதிர்பாராவிதமாக வில்லன் ஒருவனும் சந்தர்ப்பச் சூழ்நிலையால் உருவாகிவிடுவதால் தங்கையை ஒருபுறமும், வில்லனை மறுபுறமும் சமாளிக்க வேண்டியிருக்கிறது வினய்க்கு. மாரியாத்தா கோயில் கூழுக்கு தொட்டுக்க கருவாட்டுக் குழம்பு மாதிரி ஒரே ஒரு ஹீரோயின் பாவனா, ஓக்கே.

வில்லனாக வரும் கிஷோர்குமார் ரியாக்‌ஷன்களில் அசத்துகிறார் என்றால், அவரது மனைவியாக பூங்கோதை கேரக்டரில் வரும் பெண் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். தன் ரவுடி கணவனுக்கு தரப்படும் மரியாதை குறித்த பெருமிதத்தை அவர் முகத்தில் காட்டும் காட்சிகள் பிரமாதம்.

ஆடிமாசத்தில் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு பாலியல் வறட்சியால் அவதிப்படும் புதுக்கணவன்கள் மாதிரி ஆகிவிட்டார் விவேக். நகைச்சுவை சுத்தமாக நஹி, டீஷர்ட் போட்டுக்கொண்டு இளைஞர்களின் தோழராக இன்னமும் எவ்வளவு காலத்துக்கு தான் ஒப்பேத்துவாரோ தெரியவில்லை. இவரை விட சந்தானத்தின் காமெடி கொஞ்சம் பரவாயில்லை, புன்னகைக்கவாவது முடிகிறது. வினய்யின் தங்கையாக வரும் லேகா வாஷிங்டன் சரவெடி. வாய் மட்டும் கொஞ்சம் அவரது அழகை கெடுக்கிறது. முதல் காட்சியில் சுடிதார் அணிந்தும் பொட்டு வைத்து, மழையில் நனைந்து, டிபிக்கல் ஃபேமிலி கேர்ளாக பாந்தமாக இருக்கிறார். ஆனால் தொடர்ந்து வரும் காட்சிகளில் அவரது காஸ்ட்யூம் கண்ணறாவி.

ஹனீபா, தலைவாசல் விஜய், கிருஷ்ணா, நிழல்கள் ரவி என்று கேரக்டர்களை செதுக்கியிருப்பதில் இயக்குனர் கண்ணனின் கடின உழைப்பு மிளிர்கிறது. பாலசுப்ரமணியெம் கேமிரா கண்ணுக்கு குளிர்ச்சி. பாடல் காட்சிகளின் படமாக்கம் அபாரம். வித்யாசாகர் இசையில் ‘அது கூட தெரியாதா?' பாடல் இதம். சில காட்சிகள் முழுமையடையாமல் முடிவது போல தெரிகிறது. எடிட்டிங் சொதப்பலா? அல்லது சென்சார் கட்டா என்று தெரியவில்லை. படத்தின் முதல் பாதி ஜெட் வேகம், இரண்டாம் பாதியில் அதிகரித்திருக்கா விட்டால் கூட பரவாயில்லை, அதே வேகத்தை தொடர்ந்திருந்தால் கூட இன்னொரு கில்லியாக, இன்னொரு ரன்னாக படம் வந்திருக்கும். எப்படியிருந்தாலும் கலக்கலான பொழுதுபோக்கு காக்டெயிலாக வந்திருக்கிறது ஜெயம் கொண்டான்.

பெருத்த எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் ‘தாம் தூம்' சப்பையாகி விட்டதால், ஜெயம் கொண்டானுக்கு ஜெயம் நிச்சயம்!!
read more
2 comments

மலேசியாவில் பாரதிராஜா மகள் திருமணம்

16 வயதினிலே படத்தில் பணியாற்றிய சாதனையாளர்கள் ரஜினி, கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவிக்கிறார் இயக்குனர் பாரதிராஜா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு!.

பாரதிராஜாவின் மகள் ஜனனி ஐஸ்வர்யா-ராஜ்குமார் தம்பிராஜா திருமணம் இன்று மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் கிரவுன் பிளாசா முத்தியரா ஹாலில் நடக்கிறது. மலேஷிய அரசியல் பிரமுகர்கள் டத்தோ சாமிவேலு உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, கஙஅகை அமரன், பஞ்சு அருணாச்சலம், வைரமுத்து, சரத்குமார், நெப்போலியன் போன்ற திரையுலகப் பெரும் புள்ளிகள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவே மலேஷியா புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

திருமணம் முடிந்த அடுத்தநாள் மாலை ஓட்டல் இஸ்தானாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் பாரதிராஜா.

இதில் தன் முதல் படத்தின் நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினி-கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்து தருகிறார்.

"இது எங்கள் 30 ஆண்டுகால நட்புக்கு ஒரு சின்ன மரியாதை. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திரைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்பதை நிரூபிக்கத்தான் இந்த விருந்து..." என்கிறார் பாரதிராஜா.
read more