1 comments

இது எப்படி இருக்கு



யாராவது கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா...
read more
0 comments

இது எப்படி இருக்கு


இதுங்க எல்லாம் கெளம்பிடுசே....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இனிமே டாஸ் மார்க்ல நமக்கு எல்லாம் எங்க கெடைக்கும்.
read more
3 comments

விடுகதை - விடை சொல்லுங்க

ஒரு பொண்ணு ஒரு பையன் - அந்த பையனொட அப்பா யாருக்கோ மாமனார். அந்த மாமனாரோட அப்பா அந்த பொண்ணொட மாமனார். இப்போ அந்த பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன உறவு. விடை சரியா சொன்னால் அந்த பொண்ணு உங்களுக்கு தான். விடை தப்பா சொன்னால் அந்த பையன் நீங்க தான்.
read more
2 comments

தாம்பத்ய அகராதி



- அலுவலகம்: வேலை செய்யும் போது நரகமாகவும், வீட்டுக்கு வந்தவுடன் சொர்க்கமாகவும் தோன்றும் இடம்!

- ஆட்டுக் கல்: மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி, ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்!

- இரு சக்கர வண்டி: தாம்பத்யம் என்பது சைக் கிளைப் போல. நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இயங்காவிட்டால், முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை.

- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படி நிற்க வேண்டியது தான்.

- "உயிரொப்பந்தம்' எனப் படும் ஆயுள் இன்சூரன்ஸ்: உங்கள் ஆயுளை இன்ஷூர் செய்து, பாலிசியில், "நாமினி' பெயரைப் பூர்த்தி செய்யாமல் விட்டு வையுங்கள். மனைவி கொஞ்சம் இடக்கு பண்ணும் போது, "நாமினி' என்று சொல்லிப் பாருங்கள். மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி விடுவார்.

- ஊமை: தொணப்புகிறவர்களை ஓரளவுக்கு வழிக்கு கொண்டு வரலாம். ஊமை போல், "உம்' மென்று இருக் கிறதுகளிடம்தான் எச் சரிக்கை தேவை.

- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்.

- ஏய்: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லி, பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்...' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.

- ஐன்ஸ்ட்டீன்: "ரிலேடிவிட்டி தியரி'யைக் கண்டுபிடித்தவர். இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களைப் போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.

- ஒரு முழம்: இதற்கு அநேக அர்த்தங்கள் உண்டு; விளக்கம் தேவையில்லை.

- ஓமத் திராவகம்: எந்த மனிதனுக்கும் தன் வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லாமலிருக்குமா? நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாகச் சாப் பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றை பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது? அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாகவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திராவகம் கொடேன்...' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுவீர்கள்.

ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி.
read more
0 comments

அம்னோ பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு


அம்னோ உச்சமன்றம், அம்னோ பொதுக்கூட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து நஜிப் அப்துல் ரசாக்குக்கு அதிகாரத்தை மாற்றிவிடும் நிகழ்வு சுமுகமாக நடைபெறுவதற்கு வசதியாக இவ்விதம் செய்யப்படுகிறது.

அம்னோ பொதுக்கூட்டமும் கட்சித் தேர்தல்களும் டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தன.

எனினும் தொகுதித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 9 தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதிவரை நடைபெறும்.

இன்று காலை நடைபெற்ற அவசர உச்சமன்றக் கூட்டத்தில் இம்முடிவுகள் செய்யப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா, கட்சித் தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்வாரா என்பது பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். அக்டோபரில் தொகுதி நிலையில் தேர்தல்கள் நடைபெறுவதற்குமுன் அது பற்றி முடிவு செய்யப்பட்டும் என்று அவர் சொன்னார்.

“எனக்கு நெருக்குதல் எதுவும் இல்லை. அது (அதிகார மாற்றம்) நான் எடுக்கும் முடிவாக இருக்கும்”, என்றாரவர்.

“அதிகார மாற்றத்துக்கு வசதியாக பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது”, என்றும் அப்துல்லா கூறினார்.

அப்துல்லா,முதலில் 2010 ஜூன் மாதம்தாம் அதிகாரத்தை நஜிப்பிடம் ஒப்படைகக் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அண்மைய வாரங்களில், அதிகார மாற்றம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வாக்கில் நிகழ வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வந்துள்ளது.

read more
0 comments

அடுத்த முதல்வர்


நெல்லை வந்த கார்த்திக், நாங்குநேரி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேவர் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக அகிம்சை வழியில் நாம் போராட வேண்டும். இங்கு சிலையை அவமதித்ததாக தகவல் அறிந்தவுடன் இங்கு வர நினைத்தேன். சில வேலைகள் காரணமாக உடனே வர முடியவில்லை.


உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து விடுவேன். தோள் கொடுப்பேன். உங்களோடுதான் நான் இருப்பேன். சிலர் தற்போது கட்சி ஆரம்பித்து விட்டு முதல்வராகி விடுவேன் என்று கூறி வருகின்றனர். அப்படி நினைக்க கூடாது. முதல்வர் பதவி என்பது பெரிய ஸ்தானத்தில் உள்ளது. அதில் பல தலைவர்கள் தலைவிகள் அமர்ந்துள்ளனர்.

நான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன். அதற்கு சில ஆண்டுகள் ஆகும். நாம் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களில்தான் ஈடுபடவேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும் என்றார்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
read more
1 comments

தமிழனின் தலையாகிய பிரச்சனை. - கொஞ்சம் பெருசு தான்



இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அதை நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார். கூடவே அவர் அனுப்பியுள்ள கடிதம்தான் இது.

புஷ் கூறியுள்ளதன் சாராம்சம் என்னவென்றால், எரிபொருளை தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அது நினைத்தால் எரிபொருள் சப்ளையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள முடியும். அதை இந்தியா ஏன் என்று கேட்க முடியாது. சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையிலும் இந்தியாவால் ஈடுபட முடியாது என்பதே.

ஆனால் இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சொல்லும் ஒரு முக்கியமான வாதம்
123 ஒப்பந்தத்தில் எந்தக் காரணத்திற்காகவும் எரிபொருள் சப்ளை பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, என்.எஸ்.ஜி. அமைப்பு தன் பங்குக்கு இன்னொரு குண்டைப் போட்டுள்ளது. இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள என்.எஸ்.ஜி., இந்தியாவுக்கு நவீன அணு தொழில்நுட்பங்கள் எதையும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி யுரேனியம் செறிவூட்டுவது உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று என்.எஸ்.ஜி தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளிடம் இதைக் கூறித்தான், என்.எஸ்.ஜி. சமாளித்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் புஷ் கடிதமும், என்.எஸ்.ஜியின் முடிவும் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. (நன்றி - தட்ஸ் தமிழ்)

இதெல்லாம் போதாதுன்னு நாம க்ரிடிச விமர்சகர் ஞானி வேற இந்த வாரம் ஒ மம்மி ரேடுர்ன்ஸ் கிழினு கிழிசிருகாறு.

அவர் சொன்ன சில விஷயங்கள் அழமாக கவனிக்கப்பட வேண்டியவை.

அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது. கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.


இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !



இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது. (நன்றி - குமுதம் மற்றும் குற்றாலச்சாரல் ).

ஆனாலும் இதுக்கெல்லாம் தமிழன் பயன்துடுவான, விஜயகாந்தயே நாம பெரும்தன்மையோட ஏத்துகிட்டோம். இந்த அணு விசயமெல்லாம் ஜுஜுபீ. எல்லாரும் சொல்லற மாதிரி தமிழன் வந்தாரை வாழ வைப்பவன். அதனால இதுவும் தான் வந்துட்டு போகட்டும்.

ஆனா ஒரு சராசரி தமிழன்னோட பிரச்சனையே வேற.

இன்னைக்கு எந்த கட்சி மாநாடு நடத்துது. அதுல என்ன சரக்கு கேட்கும். புல்லா இல்ல ஆப் தான் கெடைக்குமா.

இன்னைகி மான்ஆட மயிலாட நிகழ்ச்சியில என்ன பிரச்சனை வரும். ஆடுற பிள்ளைங்க எல்லாம் நல்ல ஆடுமா?

தினமலர் - சன் டிவி பிரச்சனை என்ன ஆச்சு?.

கோலங்கள்அபிக்கு இன்னும் என்ன என்ன பிரச்சனை எல்லாம் வருமோ ?.

சரத்குமார் பொண்ணு சிம்பு கூட நடிக்குமா ?. சிம்பு மீண்டும் நயன் கூட சேருவாரா ?.

தலையோட அடுத்த படம் ஏகன் ஹிட் ஆகுமா?.

இப்படியே இன்னும் எவ்வளவோ தலையாகிய பிரச்சனை எல்லாம் இருக்கு.

இப்படிக்கு
வாய்கிழிய பேச மட்டுமே தெரிஞ்ச ஒரு தமிழன்.













read more